திருப்பத்தூர்- டிச-05.
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மோகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்து வியாபார சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ஏற்படும் இன்னல்கள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
நகராட்சி அலுவலர் ராஜரத்தினம் ஆலோசனை வழங்கினார்.
திருப்பத்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்க தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட பொருளாளர் அ.செந்தில்முருகன் உட்பட மற்ற சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.