Friday, February 19, 2021

"சேவைகள் ஓய்வதில்லை சேவைக்குப் பின்னரும் உழைப்போம்" முப்பெரும் விழாவில் அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சூளுரை.


 திருப்பத்தூர்-19

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம். திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக கடந்த 17ம் தேதி திருப்பத்தூர் எஸ்.ஆர்.கே. மஹாலில் கடலூர் மாநில பிரதிநிதிகள் பேரவை விளக்க கூட்டம். திருப்பத்தூர் மாவட்ட மையம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாவட்ட முதல் பேரவை கூட்டம் என முப்பெரும் விழாவாக நடைெபற்றது, 

விழாவில் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர்கள் நாராயணசாமி. ஜெயக்குமார் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் பழனிச்சாமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வாணியம்பாடி கோட்ட தலைவர் சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில கெளரவ தலைவர் பரமேஸ்வரன் துவக்கவுைர ஆற்ற, மாவட்ட செயலாளர் சி,ஏ,பாண்டியன் வேலை அறிக்கையினை வாசித்தார். பொருளாளர் கணபதி நிதிநிலை அறிக்கை வாசித்தார். மேலும் விழாவில் மாநில பொதுச்செயலாளர் பா,இரவி அவர்கள் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கடலூர் பேரவை குறித்து விளக்கவுரை ஆற்றினார்,

    திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குனர் த.மகேஷ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன்ராஜேசகர், அரிகரன் உதவி கருவூல அலுவலர் த.வெங்கடேசன், மாநில பொருளாளர் மகாலிங்கம், மாநில செயலாளர் சுப்பிரமணியன், அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மாநில தலைவர் இராமமூர்த்தி நிறைவுரை வழங்க, திருப்பத்தூர் கோட்ட சங்க தலைவர் சாம்ராஜ் நன்றி நவில விழா இனிதே நிறைவடைந்தது.

    விழாவில் ஓய்வுபெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு ரூபாய் 5 இலட்சம் மற்றும் மாதம் குறைந்தது 9 ஆயிரம் வழங்கேவண்டும், அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பாஸ், ஆண்டிற்கு இருமுைற அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசாேதனை, ஏலகிரி மலைக்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க  மாற்று பாதை வசதி, வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். திருப்பத்தூர் நகரில் வணிகம் அதிகம் நடைபெறும் கச்சேரி தெரு. தருமராஜா கோயில் தெரு. பெரியகடை தெரு, ஆலங்காயம் ரோடு போன்ற தெருருக்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கவேண்டும், புதிய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும், ஓய்வூதியர்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்தவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை மேற்காெள்ள ஆவண செய்ய வேண்டும், சம வேலைக்கு சமஊதியம் என்ற அடிப்பைடயில் ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும், கொரோணா காலங்களில் பாெதுமக்கள் நலன் கருதி பணியாற்றிய அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,


FOLLOW US OUR SOCIAL MEDIAS