ஆதியூர் செல்வராயன் ஏரி வட்டம் பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீர் .......... தீர்வு?
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமம் பெருமாள் கோயில் அருகில் உள்ள செல்வவராயன் ஏரி வட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வருகிறது பல நாட்களாக பஞ்சாயத்து, ஊராட்சி, மாவட்டம், மாநிலம், என அனைத்து துறைகளுக்கும் இது குறித்து புகார்கள் தொடர்ந்து தெரிவித்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் இதுவரை இதற்கான முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. ஏரிக்குள் செல்ல வேண்டிய நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆதியூர் செல்வராயன் ஏரியை பார்வையிட்டு அந்த ஏரியிலிருந்து புலிக்குட்டை ஏரிக்கு நீர் செல்ல கால்வாய் எடுக்கப்பட்டது. ஆனாலும் ஆ.பள்ளிப்பட்டு சு.பள்ளிப்பட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் இருந்து வரும் அனைத்து மழைநீரும் ஏரிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து விடுகிறது. பல மாதங்களாக நீர் வற்றாமல் சென்று கொண்டே இருக்கிறது. இங்கு வரும் மழைநீர் கால்வாய்களை ஏரிக்குள் எடுத்துச் செல்வதே நிரந்தரமான தீர்வாகும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.