தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை சுனில் அரோரா அறிவித்தார்.
வருகின்ற எப்ரல் மாதம் 6 ஆம் தேதி (06/04/2021) தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதனைத்தொடர்ந்து மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான தேர்தல் பார்வையளர்களாக தர்மேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் அட்டவணை விபரம் வருமாறு
வேட்பு மனு மார்ச் 12ம் தேதி முதல் ஆரம்பம்,
வேட்பு மனு பெற கடைசி நாள் மார்ச் 19
வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20
வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 22
வாக்குப்பதிவு ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை மே 2
FOLLOW US OUR SOCIAL MEDIAS