Saturday, August 15, 2020

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்றைய சுதந்திரதின கொண்டாட்டங்கள்.

 திருப்பத்தூர்-15,

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சோலையார்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக  இடைவெளியுடன் PTA துணைத்தலைவர் R.சுந்தரேசன் தேசிய கொடியை ஏற்றிவைத்தரர்  உடன் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

திருமணம், திருவிழா, சுப நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுமா? முதல்வருக்கு 1 லட்சம் தபால்அனுப்பும் இயக்கம் தொடங்கியது.

 

திருமணம், திருவிழா, சுப நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகளைத் தளா்த்தி, ஒலி, ஒளி அமைப்பு, பந்தல், வாடகை பாத்திரத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் அனுப்பும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளனா்.

வீட்டிலேயே சிறியளவில் நடத்தும் பூப்புனித நீராட்டு விழாவாக இருந்தாலும், வீதியெங்கும் தோரணங்கள் கட்டி பிரம்மாண்டமாக நடத்தும் மாநாடு, கோயில் திருவிழா, திருமணம், காதணி, நிச்சயதாா்த்தம் என எந்த விழாவாக இருந்தாலும் இந்தத் தொழிலாளா்களால்தான் சிறப்பு கிடைக்கும்.

விழாக்களுக்கு வெளிச்சத்தை அளிக்கும் இந்தத் தொழிலாளா்களின் வாழ்வில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இருள் சூழ்ந்துள்ளது. ஒலி, ஒளி அமைப்பு, பந்தல் அலங்காரம், மேடை அலங்காரம், வாடகை பாத்திரக் கடை ஆகிய தொழில்களைத் தனித்தனியாக நடத்துவோரும் உண்டு. ஒருங்கிணைந்து நடத்துவோரும் உண்டு.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பியுள்ளன. இத் தொழில்களை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் உள்ளனா். பொதுமுடக்கத்தால் இவா்கள் அனைவரும் 5 மாதங்களாக வேலையிழந்து வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, தங்களது தொழிலையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வலியுறுத்தி, தமிழ்நாடு டெண்ட் டீலா்ஸ் மற்றும் டெக்கரேட்டா்ஸ் நலச் சங்கத்தின் சாா்பில், தமிழக முதல்வருக்கு ஒரு லட்சம் தபால் அனுப்பும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளனா்.

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் எஸ். சுதாதகா், செயலா் எஸ். வெங்கடேஷ்பாபு தலைமையில் வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்டோா் தபால்களை அனுப்பினா். பொருளாளா் லியோ, துணைத் தலைவா் டோமினிக், துணைச் செயலா்கள் ராமச்சந்திரன், சேசுராஜ், பிரதாப், பிரசன்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சங்கச் செயலா் வெங்கடேஷ் பாபு கூறியது:

எங்களது தொழில் ஆண்டு முழுவதும் வருவாய் தரக் கூடியது அல்ல. விழாக்கள், விசேஷங்கள் நடைபெறும் காலத்தில் மட்டுமே வேலை இருக்கும். அப்போது கிடைக்கும் வருவாயை நம்பியே ஆண்டு முழுவதும் குடும்பத்தை நடத்த வேண்டும். குறிப்பாக மாா்ச், ஏப்ரல், மே மாதங்கள்தான் விழாக்காலம். ஆனால், இந்தாண்டு அது இல்லாமல் போனது.

அடுத்து வரும் மாதங்களில் சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் விமரிசையாக நிகழ்ச்சிகள் நடைபெறாது. எனவே, இந்தாண்டு முழுவதுமே எங்களுக்கு வேலையில்லை. மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் போ் என்றாலும் மாநிலம் முழுவதும் சுமாா் 3 லட்சம் போ் வேலையிழந்துள்ளனா்.

எனவே, திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும். திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 சதம் போ் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல பெரிதும் சிரமத்தை அளிக்கும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், சுகாதாரம் பேணுதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார். 

 

 FOLLOW US OUR SOCIAL MEDIAS


          

சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......

 

 முதல் வித்தியாசம்......

பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag Hoisting என்றழைக்கபடுகிறது.

இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்  இதை கொடியை பறக்கவிடுதல்  அதாவது Flag Unfurling என்பார்கள்.
 

இரண்டாவது   வித்தியாசம்......

சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head  கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால்  அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..
 

மூன்றாம் வித்தியாசம்.......

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ்  பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.....

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

சென்னை-15,

    நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை தேசியக்கொடியேற்றி பேசினார்.    

    தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழக அரசின் சிறப்பு விருதுகளை வழங்கினார்.

சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
 
 
 
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

74-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மா. ப. சிவன்அருள் தேசியகொடியேற்றினார்.

 திருப்பத்தூர் -15.

    74ஆம் ஆண்டு சுதந்திர தின விழா திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை காவலர் திடலில் நடைபெற்றது. மத்திய, மாநில அரசு அறிவிப்பின்படி முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளியுடன் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் மா.ப.சிவன்அருள் காலை 9.00 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி கொடிவணக்கம் செலுத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார் உடன்இருந்தார். பின்னர் ஆயுதப்படை காவலர்களின் மரியாதையை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஏற்றனர். 

    பின்னர் கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவம், சுகாதாரதுறை, காவல் துறை, உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

    விழாவில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும், திருப்பத்தூர் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 






 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை.

 

படும் நிலா பாலு

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. அவர்கள் கடந்த 5-ம் தேதி கொரோனா தோற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டதாக தகவல்கள் பரவின. 

   ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப்பற்றிய வதந்திகள் பரவ தொடங்கியது. அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிகிச்சையிலிருந்து விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும், தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் அவரது ரசிகர்களும், நண்பர்களும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.

நாமும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கின்றோம்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

 

டெல்லி: 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் தியாகத்தால் நாம் சுதந்திர நாட்டில் வாழ்ந்து வருகிறோம். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை அரசு எடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Friday, August 14, 2020

விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக இ -பாஸ் வழங்கப்படும்.- தமிழக அரசு

 

 
சென்னை-14,
    வருகின்ற 17-ஆம் தேதி முதல் ஆதார் எண், ரேஷன் அட்டை, மொபைல் எண் உடன் இ-பாஸ் விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக இ -பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தேவை இருந்தால் மட்டுமே இ-பாஸ் பெற விண்ணப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும், அதிருப்தியும் உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் இ-பாஸ் முற்றிலும் ரத்து செய்யவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தலைமை கழக செயலாளர் மாநிலங்களுக்கும், மாவட்டத்திற்கும் செல்ல தடை இருக்கும் வரை இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளார்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும். - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 25 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 25% சதவீத இடங்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

தமிழாய் இணைவோம்! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!

 


FOLLOW US OUR SOCIAL MEDIAS