Sunday, July 26, 2020

தமிழிசை சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா.


 
திருப்பத்தூர்- 

    திருப்பத்தூர்  மாவட்டத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த தமிழிசை சங்கத்திற்கு சொந்தமான இடம் சின்னகுளம்   மாரியம்மன் ஆலயம் அருகில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்க ஏ.ஜி.எஸ். குழுமத்தினர் பங்களிப்போடு செயல்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் துவங்கப்படுள்ளது.
   
    மாவட்ட ஆட்சியர் மா.ப.சிவனருள் அவர்களின் ஆலோசனையின் படி அந்த இடத்தை சுத்தம் செய்து வேறு இடத்தில் இருந்த பத்தாண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருக்கரங்களால் பதியம் செய்யப்பட்டது.

     நிகழ்வில் துணை ஆணையாளர் திருமலை, ஏ.ஜி.எஸ். குழுமத்தின் தலைவர் அ.ஞானசேகர், சுமங்கலி ஜூவல்லர்ஸ் குழுமத்தின் தலைவர் ராஜேஷ் ஜெயின், சந்திரா பேன்சி ஹால் தலைவர் வினோத்குமார், திருப்பத்தூர் நகர்ப்புற வீடியோ சங்க தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் ஏ.ஜி.எஸ். மால் செந்தில்முருகன், ஹரிஷ்குமார், அருண்குமார், ஏஜி அபிஷேக், லட்சுமணன், சி.எஸ். கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் மூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஏ.ஜி.எஸ். குழுமத்தின் பணி சிறக்க தமிழ் கருடா வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment