Monday, August 15, 2022

இந்திய சுதந்திர தின சுவாரசிய வரலாறு.... ஒரு பார்வை !

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா !

        இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றும் நம்மில் பலர் விடுதலை வரலாறு குறித்த புரிதல் இல்லாமல் இருக்கின்றோம். பொதுவாக சினிமாக்களில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவில் ஒரு பெரும் போராட்டத்திற்கு பிறகு, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இது உ ண்மைதானா? இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது குறித்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி தான் அறிவிக்கப்பட்டதா?

இரண்டாம் உலகப்போரும், இந்திய சுதந்திரமும்!

இந்திய சுதந்திர போராட்டம் 1940க்கு பிறகு தீவிரமானது. இதே நேரத்தில் இரண்டாம் உலகப்போரும் ஏற்பட்டது. போரின் காரணமாக பிரிட்டீஷ் அரசின் பொருளாதாரம் வெகுவாக குறைந்து, சொந்த நாட்டையே நிர்வகிக்க முடியாத சூழல் நிலவியது. இந்த நிலையில் 1945ல் நடைபெற்ற பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்ததது. இதற்கு முக்கிய காரணம், தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இத்தகைய காரணங்களால் 1948 ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டீஷ் அரசு முடிவெடுத்தது. 

        இந்த நிலையில்தான் 1947 பிப்ரவரி 10ல் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார். இவர் உடனடியாக நேரு, ஜின்னா உள்ளிட்ட தலைவர்களிடம் தொடர் பேச்சுகள் நடத்தினார். ஆனால் இது சுமூகமாக முடியவில்லை. காரணம், ஜின்னா தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். இதை மவுண்ட்பேட்டன் எதிர்பார்க்கவில்லை. இது முன்னதாகவே சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயத்தை அவருக்கு ஏற்படுத்தியது. இது தொடர்பாக 1947 ஜூன் 3ல் நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே சுதந்திரம் மற்றும் நாட்டைப் பிரிப்பது பற்றி முடிவு செய்யப்பட்டது.  

    1945 ஆகஸ்ட் 15ல் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் தோல்வியடைந்த ஜப்பானிய வீரர்கள், அப்போதைய ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம், சரணடைந்தனர். இதனால் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க மவுண்ட் பேட்டன் முடிவு செய்தார். ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். அதன்படி 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 நள்ளிரவு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

        சுதந்திர இந்திய நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்திய நாட்டில் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும் படி அழைத்தனர். அவர்களுடைய அழைப்பை ஏற்று அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948-ம் ஆண்டு ஜூன் மாதம் மவுண்ட்பேட்டணுக்கு பதிலாக சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அமர்த்தப்பட்டார்.

        இவ்வாறு இந்திய சுதந்திர தினமானது ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பே ஆங்கிலேயேரலால் அறிவிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவுக்கு பிறகு இது அமலுக்கு வந்தது. இத்தகைய சுவாரசியமிக்க சுதந்திர தினத்தின் வரலாறே தெரியாமல்தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை கொணடாடி வருகிறோம்.  

suthanthira thinam

        வந்தே மாதரம் !

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS