![ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள்: உள்துறை அமைச்சகம் வெளியீடு ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள்: உள்துறை அமைச்சகம் வெளியீடு](https://img.dailythanthi.com/Articles/2020/Jul/202007291924065363_Ministry-of-Home-Affairs-MHA-issues-Unlock3-guidelines_SECVPF.gif)
புதுடெல்லி:29
மார்ச் 23 முதல் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு இருந்துவந்த நிலையில் இடையில் சிறு சிறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 2ஆம் கட்ட தளர்வுகள் வருகின்ற ஜூலை 3ஆம் தேதி முடிவுறும் நிலையில் 3ஆம் கட்ட தளர்வுகள் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு.
- இதுவரை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு முற்றிலும் நீக்கப்படுகிறது.
- கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகளே அறிவித்துக்கொள்ளலாம்.
- சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, பண்பாடு, மத நிகழ்ச்சிகளுக்கு ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிக்கப்படுகிறது.
- மெட்ரோ ரயில், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்கு ஆடிட்டோரியம், அசெம்ப்ளி ஹால் போன்ற பகுதிகள், அதிகமாக மக்கள் கூட்டக் கூடிய சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு கல்வி கலாச்சாரம் மத நிகழ்வுகள்பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை தடை தொடரும்..
- மாநிலங்களுக்கு உள்லேயும், வெளியிலும் செல்ல இ பாஸ் தேவையில்லை. ஆனால் இதுகுறித்து மணிலா அரசுகள் முடிவெடுக்கலாம்.
- யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள், உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.
- வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி.
- சுதந்திர தின விழா தனிமனித இடைவெளியுடன் கொண்டாடவேண்டும்.
- கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்
- 10 வயது குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும்.
- கொரோனா பாதிப்பு குறித்த விபரங்களை அறிய ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பயன்படுத்தவேண்டும்.
- அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment