Sunday, July 26, 2020

முழு ஊரடங்கு - ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 திருப்பத்தூர்-ஜூலை, 26.

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு மக்கள் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் முழுமையாக காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்காங்கே ஒரு சில இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகிறது. மருந்து கடைகள் மட்டும் முழுவதுமாக இயங்கி வருகிறது. இன்றைய முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஐபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment