Friday, July 24, 2020

IAS ஆக வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்திய மலைவாழ் மாணவியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட சேலம் எஸ்.பி


சேலம் : ஐ.ஏ.எஸ் படிக்க விருப்பம் தெரிவித்த மலைவாழ் மாணவியின் 2 ஆண்டுகளுக்கான கல்விச்செலவை சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்துள்ளது கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம். இதில் 33 மலைவாழ் குக்கிராமங்களை கொண்ட பாலமலை பஞ்சாயத்து உள்ளது. இம்மலை கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில்தான் இப்பகுதிகளுக்கு சாலை வசதி மற்றும் மின்சார வசதி கிடைத்துள்ளது. இங்கு ராமன் பட்டி என்ற மலை கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட உயர் நிலைப்பள்ளியில் 140 மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் நேற்று முன் தினம் மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

IAS ஆக வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்திய மலைவாழ் மாணவியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட சேலம் எஸ்.பிஅப்போது அங்கு 10-ம் வகுப்பு முடித்த மாணவி ஜெயந்தி (16) எஸ்.பி.,யை சந்தித்து தனது ஐ.ஏ.எஸ் படிக்கும் தனது ஆசையை தெரிவித்தார். இதனையடுத்து மாணவியை தனது சேலம் அலுவலகத்திற்கு அழைத்து, அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் வழங்கி 2 ஆண்டுகள் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மாணவிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.



READ MORE NEWS
 www.tamilgarudanews.blogspot.com

No comments:

Post a Comment