Saturday, August 1, 2020

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்!


சென்னை -1.

    பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

பக்ரீத் வாழ்த்து செய்தி வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படும் பக்ரீத் திருநாளான இந்நாளில், எனது அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனித இனிய ப்கரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்கமாட்டாளர்கள் என்பதனை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் அவர்கள் இறைக்கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுக்கூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. 

இத்தியாகத் திருநாளில், திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனித நேயத்தை மக்கள் மனதில் நிறுத்தி அன்புடனும், சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழ்ந்திர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆளுநர் பன்வாரி லால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கடவுளின் கட்டளைக்கு மனிதன் கீழ்ப்படிவதன் அடையாளமாக பக்ரீத் கொண்டாடப்படுவதாகவும், இந்தப் புனித நாளில் தாராளம், சகிப்புத் தன்மை, இரக்கம் ஆகிய தெய்வீக நற்பண்புகளுடன் வாழ் அனைவரும் தீர்மானிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment