தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிக்காலம் முடிந்ததும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
"அரசியலமைப்பின் பிரிவு 324 இன் பிரிவு (2) இன் படி, தேர்தல் ஆணையராக
ராஜிவ் குமாரை (ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற்றவர்) நியமனம் செய்வதில் ஜனாதிபதி
மகிழ்ச்சியடைகிறார்." என்று சட்டத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதி, லவசா விடைபெற்றதும்,
அப்பொறுப்பை, ராஜிவ் குமார் ஏற்க உள்ளார் என்று தெரிகிறது.
ராஜிவ் குமார் 1984 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற
ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும்.
பி.எஸ்.சி மற்றும் எல்.எல்.பி பட்டம் பெற்றுள்ள ராஜிவ் குமார் முன்னதாக
நிதி செயலாளராக பணியாற்றியுள்ளார். கொள்கை வகுத்தல் மற்றும் நிர்வாகத்தில்
30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் இவராகும்.
![]() |
ராஜிவ் குமார் |
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment