Wednesday, August 19, 2020

மாத சராசரி பேலன்ஸ் பராமரிப்புக்கான அபராத தொகையும், எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கான கட்டணத்தையும் எஸ்பிஐ வங்கி நீக்கியுள்ளது.

 

மாத சராசரி பேலன்ஸ் பராமரிப்புக்கான அபராத தொகையும், எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கான கட்டணத்தையும் எஸ்பிஐ வங்கி நீக்கியுள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக்கு நாடு முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தலைவலியை போக்கக்கூடிய முக்கிய அறிவிப்பை எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இனி மாதாந்தர சராசரி பேலன்ஸ் தொகை இல்லாவிட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணமும் இனி வசூலிக்கப்படாது. இந்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது.

மாதம் சராசரி பேலன்ஸ் தொகை ரூ.25,000 வைத்திருப்போருக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் எஸ்.எம்.எஸ் அலர்ட்டுக்காக ரூ.12 வசூலிக்கப்படுகிறது. இதில் ஜிஎஸ்டியும் அடங்கும். ஏற்கெனவே அனைத்தும் சேலரி கணக்குகளுக்கும், ரெகுலர், கோல்டு, டைமண்ட், பிளாட்டிணம் கரண்ட் கணக்குகளுக்கும் இக்கட்டணம் விலக்கப்பட்டுள்ளது.

எனினும், சேமிப்புக் கணக்குகளுக்கு மாதாந்தர சராசரி பேலன்ஸ் தொகை வைத்திருக்காவிட்டால் அதற்கு அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. இது எஸ்பிஐ மட்டுமல்லாமல் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். இந்நிலையில் அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் சராசரி பேலன்ஸ் தொகைக்கு விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படுவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கு வசூலிக்கப்பட்டு வரும் கூடுதல் கட்டணம் இனி வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வாடிக்கையாளர்களும் எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளை இலவசமாக பெற்று பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கு பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையிலோ, இணையதளத்திலோ பதிவு செய்யலாம். இன்றைய காலகட்டத்தில் டெபிட் கார்டு மோசடிகளை தடுக்க எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகள் மிக அவசியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment