Friday, August 14, 2020

'வாரத்தின் சிறந்த காவலராக' தேர்வு செய்து பாராட்டு பாத்திரம் வழங்க முடிவு - திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பு தகவல்.

திருப்பத்தூர்-13.

    திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பு தகவல். 

திருப்பத்தூர் மாவட்டத்தில்  பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் அவர்களின் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு வாரந்தோறும் 'வாரத்தின் சிறந்த காவலராக' தேர்வு செய்து பாராட்டு பாத்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  1. முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை கைது செய்வதற்கு பணிபுரிந்தால்
  2. காவல் நிலைய பதிவேடுகளை சிறப்பாக பராமரிக்க உதவி புரிந்தால்
  3. பொதுமக்களிடம் நற்பெயர் பெரும் வகையில் பணி செய்தால் 
  4. சிறப்பாக மனு விசாரணை மேற்கொண்டால் 
  5. வாகன சோதனையின்போது சட்டவிரோத செயல்களை கண்டுபிடிக்க உறுதுணையாக பணி புரிந்தால் 
  6. உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிறந்த பணி செய்துள்ளார் என்று கருதினால் 

சம்பந்தப்பட்ட 1. காவல் ஆளிநர்கள் 2. நிலைய பொறுப்பு அதிகாரிகள் 3. தனிப்பிரிவு காவல் ஆளிநர்கள் 4. பொதுமக்கள் யாரேனும் 5. சம்பந்தப்பட்ட உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் 

காவலரின் சிறந்த பணியினை  9486242428 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பவேண்டும். தேவை ஏற்பட்டால் வீடியோ எடுத்தும் அனுப்பலாம்.

ஒரு வாரத்திற்குள் நடைபெற்ற விவரங்களை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். திங்கள்கிழமை கடந்த வாரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஆளிநர்கள் விவரம் தெரிவிக்கப்படும்.

தேர்வு செய்யப்படுபவருக்கு ரொக்கமாக ரூபாய் 500/- மற்றும் பாராட்டு பத்திரம் மற்றும் புத்தக பரிசும் வழங்கப்படும்.

எனவேதிருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் தங்கள்  உள்ள காவல்  நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆளிநர்கள் சிறந்த முறையில் பனி செய்பவர்கள் குறித்த விவரங்களை மேற்குறித்த எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment