Friday, August 7, 2020

குறுஞ்செய்திகள்-50

  1. தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல். "காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை" 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என தகவல்

  2. கடந்த 31ஆம் தேதி ஆம்பூர் பேட்டை பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர விநாயகர் கோவிலில் கோபுர கலசம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இளைஞர்களின் முயற்சியாலும் வாணியம்பாடி காவல்துறையின் துரித நடவடிக்கை ஆளும் இன்று மீட்கப்பட்டுள்ளது.

  3.  வாணியம்பாடி டிஎஸ்பி அதிரடி மாற்றம் புதிய டிஎஸ்பியாக பழனிசெல்வம் நியமனம்.

  4. இலங்கை அதிபரானார் மஹிந்த ராஜபக்ஷே - பிரதமர் மோடி வாழ்த்து.
     

  5. சரயு நதிக்கரையில் ஒரு வரலாறு உருவாக்கப்படுள்ளது. - பிரதமர் மோடி.

  6.  தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தொடரும்- தமிழக முதல்வர் உறுதி.

  7. ஜம்மு-காஷ்மீர் புதிய கவர்னராக மனோஜ் சின்ஹா நியமனம். 

  8. இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடு தலையிட கூடாது: வெங்கையா நாயுடு.

  9. கொரோனா அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு.

  10. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவுக்கு பலி.

  11. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 976 உயர்ந்து 42,592 ரூபாய்க்கு விற்பனை.

  12. மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  13. தமிழகத்தில் இன்று புதியதாக 5684 பேருக்கு கொரோனா தொற்று. 110 பேர் இறப்பு.

  14. மக்கள் ஒத்துழைப்பால் பரவல் குறைகிறது - தமிழக முதல்வர் 

  15. சென்னையில் அம்மோனியம் நைட்ரைட்  உள்ளது.- சுங்கத்துறை.

  16. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 9ஆம் தேதி உருவாகிறது.

  17. துப்பாக்கி சூடு விவகாரம் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன். 

  18. ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும். ரிசர்வ் வங்கி அறிவிப்பு 

  19. நீலகிரியில் அதிக மழைக்கு வாய்ப்பு. - வானிலை தகவல் மையம் அறிவிப்பு. 

  20. சீனாவுடன் தொடர்புடைய 2500 யூடுயூப் சேனல்களை கூகிள் நீக்கியது. 

  21. ஊழலுக்கு வழி வகுக்கும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.  ஸ்டாலின் வலியுறுத்தல். 

  22. மும்பையில் வரலாறு காணாத மழை. 

  23. மக்களின் கருத்துக்கு பின் பள்ளிகளை திறக்க முடிவு - அமைச்சர் 

  24. விநாயகர் சிலைக்கு அனுமதி வேண்டும் என அரசிடம் வலியுறுத்தல். 

  25. லெபனான் வெடி விபத்து. பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு. 

  26. பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் நலமாக இருக்கிறார். MGM மருத்துவமனை அறிவிப்பு. 

  27. ராமர்கோயில் பூமி பூஜையை அமெரிக்கா, பிரிட்டன் மக்கள் அதிகம் பார்த்தனர். 

  28. டில்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவிற்கு தயாராகி கொண்டிருக்கிறது. 

  29. தேசிய கல்வி கொள்கை மாநாட்டில் மோடி உரையாற்றுகிறார். 

  30. 6272 பேர் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 

  31. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 4 கோடி நிதி உதவி. 

  32. பாடப்புத்தகம் வழங்கும் போது சமூக இடைவெளி தவறாமல் பின்பற்றவேண்டும். கல்வித்துறை எச்சரிக்கை. 

  33. சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையை துவக்கியது சி. பி. ஐ. 

  34. மத்திய தணிக்கை குழு தலைவராக ஜி. சி. முர்மு நியமனம். 

  35. கேரள முதல்வர் அலுவலகத்தில் தங்கம் கடத்தல் ஸ்வப்னாவுக்கு தொடர்பு. என். ஐ. ஏ. 

  36. கொரோனா தொற்று கட்டுக்குள் வருவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்- தமிழக முதல்வர். 

  37. தென் தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு சென்னையில் அளிப்பதை விட அதிக சலுகை வழங்கப்படுகிறது-முதல்வர். 

  38. திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் 40வது வீர வணக்க நாள் நடைபெற்றது. 

  39. திருப்பத்தூர் அருகே மொபைல் வாங்கி தராததால் மாணவன் தற்கொலை. 

  40. மதுக்கடைகள் திறந்ததில் பொதுநலன் ஏதும் இல்லை -மதுரை உயர் நீதிமன்றம். 

  41. 6 எம் எல் ஏ க்கள் இணைப்பு. இடைக்கால தடை விதிக்க ராஜஸ்தான் கோர்ட் மறுப்பு. 

  42. ''கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்கு காணிக்கை செலுத்துவோம்!'' திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மடல். 

  43. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு செயல்படுத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை. 

  44. கலைஞரின் கடைசி யுத்தம் நூலை வெளியிட்டார் மு. க. ஸ்டாலின். 

  45. ''கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் மாரத்தான் 2020'' ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

  46. பெரம்பலூரில் சித்தா சிறப்பு சிகிச்சை மையம் தொடக்கம். 

  47. அரசு பள்ளியில் படித்த மாணவி சரண்யா ஐ. ஏ. எஸ். தேர்வில் முதலிடம். 

  48. வங்கியில்  நகை மதிப்பில் 90% கடன் வழங்கப்படும். ரிசர்வ் வங்கி அறிவிப்பு. 

  49. திருப்பத்தூர் மாணவி யாமினி UPSC தேர்வில் வெற்றி. 

  50. பொறியியல் படிப்பிற்கான கல்வி கட்டணத்தை உயர்த்த தனியார் கல்லூரிகள் கோரிக்கை. 

 
 
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment