![]() |
பினராயி விஜயன் |
திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா தொற்று ஒரே நாளில் மேலும் 720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலத்தின் பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், கேரளத்தில் இன்று புதிதாக 720 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,994 ஆக உயர்ந்தது. இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 8,056 பேர் சிகிச்சையில் உள்ளது.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
No comments:
Post a Comment