திருப்பத்தூர் ஜூலை -17
கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம
கும்பல் காவி சாயத்தை
ஊற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து தி.மு.க., தி.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்கள் மாலை அணிவித்து கண்டன முழக்கமிட்டனர்.
திமுக, திராவிட கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தனித் தனியாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கண்டன முழக்கமிட்டனர்.
கிருஷ்ணமூர்த்தி
செய்தியாளர்,
மக்கள் சந்திப்பு நாளிதழ்
திருப்பத்தூர்.
9442416077
No comments:
Post a Comment