Friday, July 31, 2020

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மாடுகள் உயிரிழப்பு



திருப்பத்தூர் ஜூலை 31,
    திருப்பத்தூர் அருகே ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு மின்சார ஊழியர்கள் அலட்சிய  போக்கால் நடந்தேறியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

    திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாத்தூர் கிராம  ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் விவசாயி பாப்பண்ணன் வயது (55) இவருக்கு சொந்தமான இரண்டு பசு மாடுகள்  மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

விவசாயி பாப்பண்ணன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு நாட்டு பசு மாடு வாங்கி விவசாயத்திற்க்காகவும் பால் கறந்து அதன் வருவாயில் குடும்பத்தை நடத்தி   வந்துள்ளார்

இரவு முழுவதும் மழை பெய்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமமே  இருளில் மூழ்கியிருந்தது

கொரட்டி கிராமம் பகுதியிலிருந்து காக்கங்கரை இருப்பு பாதை செல்லும் சாலை வரை இன்று காலை மின்சார பணியாளர்கள் மின் கம்பங்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

அம்பேத்கர் நகர்  பகுதியில் 11 ஆயிரம் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பத்தில் பீங்கான் உடைந்து இருப்பதை பார்க்காமல் மின்சார ஊழியர்கள் மின்சாரத்தைச் செலுத்தி உள்ளனர்

அப்போது அப்பகுதியில் பலமான வெடி சத்தம் போல் கேட்டது என்று  சத்தத்துடன் வெடித்து தீப்பற்றிக் கொண்டு மின் வயர் அருந்து சாலை அருகே உள்ள மாட்டின் மீது விழுந்து விட்டது மாடு சிறிது நேரத்தில் துடித்துக் கொண்டு இறந்துள்ளது  

 இதை கண்ட விவசாயி பாப்பண்ணன் கூச்சல் போட்டுக் கொண்டு மாட்டின் அருகே சென்று உள்ளார்.

அப்பொழுது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மின் வயர் அறுந்து கிடந்தது கண்டு  தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்பொழுது மின்சார ஊழியர்கள் அங்கு பணியில் இருந்துள்ளனர் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிறுத்தம் செய்தனர்.

அது பிரதான கிராமங்களுக்கு செல்லும் சாலையாக அமைந்துள்ளதால் பொது மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியாகும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

 விவசாயி பாப்பண்ணன் இந்த மாடுகளின் வருவாயினைக் கொண்டுதான்  பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

மாடுகளை பறிகொடுத்த விவசாயி குடும்பத்தினர் கதறி அழுவதைக் கண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு கண்கலங்க வைத்து விட்டது.

'நாங்கள் சமீபத்தில் ஒரு லட்சம் மதிப்பில் இரண்டு நாட்டு பசு மாடுகளை வைத்து ஏர் உழுவதற்கும் பால் கறக்கவும் ஜீவாதாரமாக வைத்து வாழ்ந்து வந்தோம். ஆனால் இரண்டு மாடுகளை மின்சாரத்துக்கு பறிகொடுத்துவிட்டு நாங்கள் நடுத் தெருவில் நிர்க்கதியாய் நிற்கிறோம். எங்களுக்கு தமிழக அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்' என்று விவசாயி பாப்பண்ணன் கூறினார்.

அப்பகுதி மக்கள் கூறுகையில் மின்சார ஊழியர்கள் மெத்தனப்போக்கால் தான் இதுபோன்ற செயல்கள் நடந்தேறி வருகின்றது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.   

கந்திலி காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அப்பகுதியில் இரண்டு மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment