திருப்பத்தூர் -15.
74ஆம் ஆண்டு சுதந்திர தின விழா திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை காவலர் திடலில் நடைபெற்றது. மத்திய, மாநில அரசு அறிவிப்பின்படி முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளியுடன் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் மா.ப.சிவன்அருள் காலை 9.00 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி கொடிவணக்கம் செலுத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார் உடன்இருந்தார். பின்னர் ஆயுதப்படை காவலர்களின் மரியாதையை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஏற்றனர்.
பின்னர் கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவம், சுகாதாரதுறை, காவல் துறை, உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
விழாவில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும், திருப்பத்தூர் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.






FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment