வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைத்து, புதிய கட்டிடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மேலும் இ பாஸ் நடைமுறை தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் முக்கிய பணிகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்னோடியாக விளங்கி கொண்டிருக்கிறது. அதிக கொரோனா டெஸ்ட் எடுத்து தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
விழாவில் அமைச்சர் வீரமணி, நீலோபர் கபில், மூன்று மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment