Thursday, August 13, 2020

ஆடி கிருத்திகை பெருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் முழுவதும் ஆடி கிருத்திகை பெருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
 தமிழகம் முழுவதும் ஆடி கிருத்திகை பெருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. கூட்டம் கூடுவதற்கு தடை, விழாக்கள் கொண்டாட தடை  என இருக்கும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற  திருத்தலம் ஏலகிரி அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஜலகாம்பாறை ஸ்ரீ வெற்றி வேல் முருகன் திருத்தலத்தில், ஶ்ரீ வெற்றி வேல்முருகனுக்கு ஆடி கிருத்திகை பெருவிழா மிகவும் எளிய முறையில் நடைபெற்றது. மக்கள் குறைந்த அளவே ஆலயங்களுக்கு சென்று வழிபட நேர்ந்தது. மற்றவர்கள் தங்கள் வீடுகளிலேயே விரதம் இருந்து வழிபாடு செய்தனர். 

 
 
 
 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment