ஜான்சன் அண்ட் ஜான்சன் என்ற அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனா
தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கி, அதை அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில்
மூன்றாம் கட்ட சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் மருந்து சோதனையில்
கலந்து கொண்ட ஒருவருக்கு காரணம் கண்டறிய முடியாத வகையில் பாதிப்பு
ஏற்பட்டுள்ளதால், மருந்து சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக
இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் இதே போல அஸ்ட்ராஜெனிகா
நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் நரம்பு மண்டல பாதிப்பிற்கு
ஒரு பெண் உள்ளானதால், சில வாரங்கள் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர்
மீண்டும் தொடர்கிறது. அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு கொரோனா நோய்
தடுப்பு மருந்து காரணமல்ல என்று கண்டறியப்பட்ட பின் மீண்டும் சோதனைகள் தொடர
அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா நோய் மருந்து சோதனையில் இது போல் நடப்பது
இது இரண்டாவது முறையாகும்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS





No comments:
Post a Comment