Saturday, November 28, 2020

சாமி தரிசனம் மற்றும் கிரிவலம் செல்ல தடை, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் (29-11-2020   & 30-11-2020) ஆகிய இரு நாட்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் இரு நாட்களும் கிரிவலம் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.  
தீபத் திருவிழா நாளன்று வெளியூர்களில் இருந்து பக்தர்கள்,  பொதுமக்கள் திருவண்ணாமலை நகருக்கு வருவது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.  

எனவே வெளியூர் பக்தர்கள்,  பொதுமக்கள் தீபத் திருவிழாவை காண திருவண்ணாமலை நகருக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment