Thursday, June 10, 2021

அகில இந்திய YS.ராஜசேகர் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.



    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா சின்னமோட்டூர்  கிராம மக்களுக்கு சுமார் 60 குடும்பங்களுக்கு அரிசி காய்கறி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன மேலும் திருப்பத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சங்கர்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்  மற்றும் திருப்பத்தூர் நகர தலைவர் மணி முன்னிலையிலும். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய பொதுச் செயலாளர் M. பாஸ்கர் மற்றும் அகில இந்திய தலைவர் கத்திப் இக்பால்  அகமது.  மாநில மகளிரணி  தலைவி திருமதி கீதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர  பொறுப்பாளர்கள் மகளிர் அணி  நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியில் அகில இந்திய பொதுச் செயலாளர் பாஸ்கர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஊரடங்கு காலத்தில் அவதிப்படும் அனைத்து ஏழை மக்களுக்கும் தொடர்ந்து சேவைகளை செய்து வருவோம் மேலும்  கடந்த மூன்று வருடங்களாக  எங்கள் சேவை தொடர்கிறது ஊரடங்கு காலம் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment