கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது புகார் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழகத்தில் பலரும் கடுமையாக குரல் கொடுத்தனர்.
இந்நிைலயில் யூ டியூப் சேனல் நிறுவனர் மற்றும் தொகுப்பாளர் கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் யூ டியூப் மூலம் நீக்கப்பட்டது.
அடுத்து மொத்தமாக இந்த சேனலை நீக்க பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூ டியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இன்று இரவுக்குள் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மொத்தமாக முடக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment