![]() |
எடப்பாடி பழனிசாமி |
சென்னை - 27.
மருத்துவ படிப்பில், ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை
வரவேற்கிறேன். அதிமுக அரசு எடுத்த நடவடிக்கையால்தான் இந்த சிறப்புமிக்க
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-சமூகநீதி
காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள்
பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ
படிப்பில் ஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை
வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி
தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது:இட
ஒதுக்கீடு வழங்க, விரைவாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இட
ஒதுக்கீடு கோர ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிமை உள்ளது. அவர்களுக்கான இட
ஒதுக்கீட்டை மறுக்க முடியாது. வழங்க எந்த தடையும் இல்லை. குறைந்தபட்ச கல்வி
தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும்.
மத்திய , மாநில அரசுகள் மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசித்து இட ஒதுக்கீடு
குறித்து முடிவெடுக்க வேண்டும்.மாநில அரசுகளுடன் ஆலோசித்து, மத்திய அரசு 3
மாதங்களில் முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு சென்னை உயர்நீதி மன்றம்
உத்தரவிட்டிருந்தது.
No comments:
Post a Comment