திருப்பத்தூர்-1,
திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மானவள்ளி பகுதியில் வசித்துவரும் ராஜேந்திரன் (55) இவர் சலூன் கடை நடத்தி வருகின்றார்.
ராஜேந்திரனின் மகன் ராமச்சந்திரன் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் திருப்பத்தூர் பகுதியில் தனியார் மருத்துவ மனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மகனை பார்க்க ராஜேந்திரன் தன்னுடைய மருமகள் ஜெயபிரதாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது ராஜேந்திரனின் மனைவி கஸ்தூரி (50) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கஸ்தூரி வீட்டை பூட்டாமல் அருகிலுள்ள நிலத்திற்கு மாடு கட்ட சென்றுள்ளார்.
மீன்டும் கஸ்தூரி நிலத்தில் இருந்து வீட்டிற்க்கு வந்து பார்க்கும்போது வீடு திறக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த பிரோ திறக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்து போய் உள்ளே சென்று பார்க்கும்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த15 சவரன் தங்க நகை, 1/2 கிலோ வெள்ளி மற்றும் ரொக்க பணம் 10 அயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர் ஸ்ரீதர் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். கந்திலி பகுதியில் தொடர் கொள்ளை காரணமாக அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மானவள்ளி பகுதியில் வசித்துவரும் ராஜேந்திரன் (55) இவர் சலூன் கடை நடத்தி வருகின்றார்.
ராஜேந்திரனின் மகன் ராமச்சந்திரன் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் திருப்பத்தூர் பகுதியில் தனியார் மருத்துவ மனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மகனை பார்க்க ராஜேந்திரன் தன்னுடைய மருமகள் ஜெயபிரதாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது ராஜேந்திரனின் மனைவி கஸ்தூரி (50) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கஸ்தூரி வீட்டை பூட்டாமல் அருகிலுள்ள நிலத்திற்கு மாடு கட்ட சென்றுள்ளார்.
மீன்டும் கஸ்தூரி நிலத்தில் இருந்து வீட்டிற்க்கு வந்து பார்க்கும்போது வீடு திறக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த பிரோ திறக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்து போய் உள்ளே சென்று பார்க்கும்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த15 சவரன் தங்க நகை, 1/2 கிலோ வெள்ளி மற்றும் ரொக்க பணம் 10 அயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர் ஸ்ரீதர் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். கந்திலி பகுதியில் தொடர் கொள்ளை காரணமாக அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment